ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
களனி குற்ற விசாரணைப் பிரிவினரால் நேற்று (31) பிற்பகல் 2.05 மணியளவில் பேலியகொடை பாலத்திற்கு அருகில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து 4 கிராம் 230 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மற்றும் 1000 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர் இன்று (01) புதுக்கடை இல -05 நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் பேலியகொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.