கிறிஸ்மஸ் தினத்தன்று மதுவரித் திணைக்கள அதிகாரிகளால் 146 பேர் கைது!

216 0

கிறிஸ்மஸ் தினத்தன்று மதுவரித் திணைக்களத்தின் சட்ட விதிமுறைகளை மீறி மதுபான விற்பனை மற்றும் அதனுடன் தொடர்புபட்ட நடவடிக்கையில் ஈடுபட்ட 146 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் இவ்வாறு கைதானவர்களிடமிருந்து சுமார் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான மதுபானங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பாக 76 சோதனைகளும், சட்டவிரோதமாக மதுபானம் வைத்திருப்பது தொடர்பாக 31 சோதனைகளும், சட்டவிரோத மதுபான பரிமாற்றம் தொடர்பில் 10 சோதனைகளும் மதுவரித் திணைக்கள அதிகாரிகளினால் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்களை அடுத்த இரண்டு நாட்களில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

1913 என்ற மதுவரித் திணைக்களத்தின் தொலைபேசி இலக்கத்துக்கு வந்த அழைப்பிற்கிணங்கவே அதிகளவான சோதனைகள் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.