சம்­பிக்­கவின் விடு­த­லைக்­காக அனைத்தையும் செய்யத் தயார்: சஜித் பிரே­ம­தாஸ உறுதி

265 0

ஜனா­தி­பதித் தேர்தல் பிர­சா­ரங்­களின் போது எமது தரப்பின் சார்பில் அர்ப்­ப­ணிப்­புடன் பணி­யாற்­றிய சம்­பிக்க ரண­வக்­கவின் விடு­த­லைக்­காக சட்­ட­ரீ­தி­யாக மேற்­கொள்­ளத்­தக்க அனைத்துக் காரி­யங்­க­ளையும் செய்வோம் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சஜித் பிரே­ம­தாஸ தெரி­வித்தார்.

வெலிக்­கடை பொலிஸ் பிரிவில் 2016 ஆம் ஆண்டு இடம்­பெற்ற விபத்து சம்­ப­வ­மொன்று தொடர்பில் இந்­நி­லையில் சஜித் பிரே­ம­தாஸ நேற்று சனிக்­கி­ழமை கொழும்­பி­லுள்ள வெலிக்­கடை சிறைச்­சா­லைக்குச்சென்று சம்­பிக்க ரண­வக்­கவைச் சந்­தித்துக் கலந்­து­ரை­யா­டினார். சந்­திப்பின் பின்னர் சிறைச்­சா­லைக்கு வெளியே ஊட­கங்­க­ளுக்குக் கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே சஜித் பிரே­ம­தாஸ மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இன்­றைய தினம் (நேற்று) சம்­பிக்க ரண­வக்­கவை சந்­திப்­ப­தற்­கான நானும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சிலரும் இங்கு வரு­கை­தந்­தி­ருக்­கிறோம். கடந்த ஜனா­தி­பதித் தேர்தல் பிர­சா­ரங்­களின் போது எமது தரப்பின் சார்பில் அர்ப்­ப­ணிப்­புடன் பணி­யாற்­றிய சம்­பிக்க ரண­வக்­கவின் விடு­த­லைக்­காக சட்­ட­ரீ­தி­யாக மேற்­கொள்­ளத்­தக்க அனைத்துக் காரி­யங்­க­ளையும் செய்வோம். சம்­பிக்க ரண­வக்­கவின் உடல்­நி­லையைப் பொறுத்­த­வரை வைத்­திய பரி­சோ­தனை அறிக்­கை­களின் பிர­காரம் அவ­ருக்கு அத்­தி­யா­வ­சி­ய­மாக வழங்­கப்­பட வேண்­டிய வச­திகள் அனைத்தும் பெற்­றுக்­கொ­டுக்­கப்­படும் என்று நம்­பு­கின்றேன்.

இவ்­வி­வ­காரம் தற்­போது நீதி­மன்­றத்­தினால் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­தனால், இது­கு­றித்து சட்­டத்­திற்கு உட்­பட்ட வித­மாக எமக்குச் சாத்­தி­ய­மான அனைத்­தையும் சம்­பிக்க ரண­வக்­கவின் சார்பில் செய்வோம் என்­பதை மாத்­தி­ரமே என்னால் கூற­மு­டியும். அதே­வேளை அவ­ரு­டைய கைது பாரா­ளு­மன்ற சம்­பி­ர­தா­யங்­களை மீறியே மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கி­றது என்­பது அனை­வரும் அறிந்த விட­ய­மாகும் என்றார்.

மேலும் செய்­தி­யா­ளர்கள் சஜித் பிரே­ம­தா­ஸவை எதிர்க்­கட்­சித்­த­லைவர் என்று அழைத்­த­போது, தான் எதிர்க்­கட்­சித்­த­லைவர் என்­பது உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­பட்டு உறு­தி­யான பின்னர் அவ்­வாறு அழைக்­கு­மாறு கேட்­டுக்­கொண்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

நீர்­கொ­ழும்பு சிறைச்­சா­லைக்கு விஜயம்

இதே­வேளை  சஜித் பிரே­ம­தாஸ  நேற்று (21) சனிக்­கி­ழமை 1 மணி­ய­ளவில்  நீர்­கொ­ழும்பு சிறைச்­சா­லைக்கு விஜயம் செய்தார்.

நீர்­கொ­ழம்பு சிறைச்­சா­லையில்  பல மாத­கா­ல­மாக விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள ஐக்­கிய தேசியக் கட்;சியின் நீர்­கொ­ழும்பு முன்னாள் அமைப்­பா­ளரும், முன்னாள் மாகாண சபை உறுப்­பி­னரும் நீர்­கொ­ழும்பு மாந­கர சபையின் முன்னாள்  எதிர்­கட்சித் தலை­வ­ரு­மான ரொயிஸ்  விஜித்த பெர்­னாந்து , ஐக்­கிய தேசியக் கட்;சியின் சிலாபம் அமைப்பாளரும்  புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சாந்த அபேசேகர ஆகியோரை சந்தித்து சுகநலம் விசாரிப்பதற்காகவே சஜித் பிரேமதாச  சிறைச்சாலைக்கு விஜயம் செய்தார்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன, ஹெக்கடர் அப்புஹாமி, அசோக் அபேசிங்க ஆகியோரும் சிறைச்சாலைக்கு விஜயம் செய்தனர்.