பயி­ரி­டப்­படும் தென்­னையில் சுமார் 10 வீதம் வன விலங்­கு­களால் அழிப்பு – ரமேஷ் பத்­தி­ரண

486 0

பயி­ரி­டப்­படும் தென்­னையில் சுமார் 10 வீதம் வன விலங்­கு­களால் அழி­வுக்­குள்ளாவதை தடுப்­ப­தற்கு மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய வழி­வ­கைகள் குறித்து பெருந்­தோட்டக் கைத்­தொழில் அமைச்சர் ரமேஷ் பத்­தி­ரண கவனம் செலுத்­தி­யுள்ளார்.

அமைச்சர் பத்­தி­ரண கடந்த வாரம் தென்னை கைத்­தொ­ழிலை பாது­காக்கும் அமைப்பின் உறுப்­பி­னர்­க­ளுடன் தென்னை பயிர்ச்­செய்­கையை மேம்­ப­டுத்­து­வது தொடர்­பாக விசேட கலந்­து­ரை­யா­ட­லொன்றை நடத்­தி­யுள்ளார். இந்த கலந்­து­ரை­யா­டலின் போதே இவ்­வி­டயம் தொடர்பில் கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ளது.

இந்த கலந்­து­ரை­யாடல் தொடர்பில் அமை ச்சின் ஊட­கப்­பி­ரிவு வெளி­யிட்­டுள்ள ஊடக அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

இந்த கலந்­து­ரை­யா­டலில் தென்னங் கைத்­தொ­ழிலை மேம்­ப­டுத்­து­வது தொடர்­பா­கவும் தென்னை கைத்­தொ­ழி­லா­ளர்­க­ளு க்கு அதிக வரு­மா­னத்தை பெற்­றுக்­கொ­டுக் கும் பல்­வேறு நிகழ்ச்­சித்­திட்­டங்கள் குறித்து கவனம் செலுத்­தப்­பட்­டது.

தென்னங் காணிகள் துண்­டா­டப்­படும் சம்­ப­வங்கள் அதி­க­மாக இடம்­பெ­று­வ­தா­கவும் இவ்­வாறு காணிகள் துண்­டா­டு­வதை கட்­டுப்­ப­டுத்த கடு­மை­யாக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் என்றும் முன்­மொ­ழி­யப்­பட்­டது.

இது தொடர்­பாக தேயிலை மற்றும் தென் னங் காணி­களை துண்­டா­டு­வதை கட்­டுப்­ப­டுத்தும் சபை­யினால் சட்ட ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என்றும்  அமைச்சர் ரமேஷ் பத்­தி­ரன உரிய அதி­கா­ரி­க­ளுக்கு பணிப்­புரை விடுத்­தி­ருக்­கிறார். அதே­போன்று தற்­போது அனு­ம­தி­யின்றி துண்­டா­டு­வ­தற்கு இட­ம­ளிக்­கப்­படும் தென் னங் காணி­க­ளுக்­கான அதி­க­பட்ச வரை­ய­றையை 10 ஏக்­க­ரி­லி­ருந்து 05 ஏக்­கர்­க­ளாக குறைப்­ப­தற்கு தேவை­யான நட­வ­டிக்­கைகள் உட­ன­டி­யாக மேற்­கொள்­வ­தற்கும் அமைச்சர் தீர்­மா­னித்­துள்ளார்.

பயி­ரி­டப்­படும் தென்­னையில் சுமார் 10 வீதம் வன விலங்­கு­களால் அழி­வுக்­குள்­ளா­வதை தடுப்­ப­தற்கு மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய வழி­வ­கைகள் குறித்தும் கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ள­துடன், அதற்­காக பயி­ரி­டப்­படும் தென்­னங்­கன்­றுகள் வளரும் வரை முறை­யாக பாது­காப்­ப­தற்கும் நட­வ­டிக்கை எடுக்க தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

அதே­போன்று தென்னை மரங்­களை வெட்­டு­வதை கட்­டுப்­ப­டுத்தும் சட்­டத்­தையும் உட­ன­டி­யாக திருத்­தவும் தற்­போது அனு­ம­தி­யின்றி வெட்­டு­வ­தற்கு தடை­செய்­யப்­பட்­டுள்ள பலா, ஈரப்­பலா, பனை ஆகிய மரங்­க­ளுடன் தென்னை மரங்­க­ளையும் உள்­ள­டக்­கு­மாறு தென்னங் கைத்­தொ­ழிலை பாது­காக்கும் அமைப்­பினால் கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.

தென்­னங்­கன்­றுகள் வளரும் பரு­வத்தில் அக்­கன்­று­களை அழித்­து­வரும் சிவப்பு நிற வண்­டு­களின் பிரச்­சி­னையை முற்­றாக ஒழிப்­ப­தற்கு தேவை­யான நட­வ­டிக்­கை­களை உட­ன­டி­யாக மேற்­கொள்­ளு­மாறும் அமைச்­ச­ரினால் அமைச்சின் மேல­திக செய­லா­ள­ருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் சுத்திகரிக்கப்ப டாத எண்ணெய்யின் அளவு அதிகரித்துள்ளது. எனினும் சுதேச தென்னை பயிர்ச்செய்கையை பரவலாக்க வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் சுட்டிக்காட்டியதுடன், அதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு தென்னைக் கைத் தொழிலை பாதுகாக்கும் அமைப்பிடம் கோரிக்கை விடுத்தார்.