பொதுத் தேர்தலை மையப்படுத்தி 50 நாள் வேலைத்திட்டம் – ஜே.வி.பி.

223 0

எதிர்வரும் பொதுத் தேர்தலை மையமாகக் கொண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி 50 நாள் வேலைத்திட்டமொன்றை மேற்கொள்ள தயாராகவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்போது ஜனாதிபதித் தேர்தலில் வீழ்ச்சியடைந்த வாக்குகளை அதிகரிக்கும் நோக்கிலேயே இந்த வேலைத் திட்டம் அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.