பிரித்தானிய பொதுத்தேர்தலில் 33 ஆசனங்களை பெற்று பிரதமர் பொறிஸ்ஜோன்சனின் கொன்சவேர்ட்டிவ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.
இதுவரை வெளியான முடிவுகளின்படி கொன்சவேர்ட்டிவ் கட்சிக்கு 338 ஆசனங்கள் கிடைத்துள்ளன. பிரதமரின் கட்சி 368 ஆசனங்கள் கிடைக்கலாம் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
தொழில்கட்சிக்கு 200 ஆசனங்கள் கிடைத்துள்ளன.
இந்த வெற்றி பிரெக்சிட்டை சாத்தியமானதாக்குவதற்கான ஆணையை தனக்கு வழங்கும் என பிரதமர் பொறிஸ்ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தல் முடிவுகள் ஏமாற்றமளித்துள்ளது என தெரிவித்துள்ள தொழில்கட்சியின் தலைவர் எதிர்காலத்தில் தேர்தல்களில் போட்டியிடப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.