3 பிள்ளைகளின் தந்தை தூக்கிட்டு தற்கொலை

239 0

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாமிமலை ஸ்ரஸ்பீ  தோட்ட குமரி பிரிவைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 52 வயதுடைய பாலசுப்ரமணியம் என்பவர்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒருவார காலமாக வயிற்று வலியால் துடித்த அவர் நேற்று இரவு தனது வீட்டுக்கு அருகில் உள்ள பாழடைந்த வீட்டின் கூறையில் தூக்கிட்டுக் கொண்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய உதவி அதிகாரி தெரிவித்தார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு ஹட்டன் நீதிமன்ற நீதிபதி நேரில் சென்று பார்வையிட்டதும் சடலம் கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் சோதனை மேற்கொண்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.