சுரக்ஷா காப்புறுதி மாணவர்களுக்கு முக்கியமானது என்பதால், எவ்விதக் குளறுபடிகளும் இன்றி அதனைத் தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக, கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்.
நடுத்தர வகுப்பைச் சேர்ந்த குடும்ப மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட பிரதானமான குறித்த காப்புறுதித் திட்டம் இது எனவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் திட்டத்தை அமுல்படுத்தும் போது ஏற்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து, இக்காப்புறுதி திட்டத்தைப் பயன் பெறும் வகையில் அமுல்படுத்தத் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நான்கு மில்லியனுக்கும் அதிக மாணவர்களுக்காக அமுல்படுத்தப்பட்டுள்ள குறித்த சுரக்ஷா காப்புறுதித் திட்டத்தை அரசாங்கம் இரத்துச் செய்யத் தீர்மானித்துள்ளதாக வெளியான தகவல் அனைத்தும், முற்றிலும் பொய்யானது என்றும், கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.