யாழ்ப்பாணம் சங்கானையில் பேரூந்தின்மீது தாக்குதல்

368 0

20160102_154431-300x180இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாணம் காரைநகர் சாலைக்கு சொந்தமான பேரூந்து மீது இன்று இரவு 8.30 மணியளவில், சங்கானைப் பகுதியில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து சங்கானை சித்தங்கேணி ஊடாக காரைநகர் நோக்கி சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்து மீது, சங்கானை மதவடிப் பகுதியில் வைத்து, மோட்டார் சைக்களில் வந்த இனம்தெரியாத நபர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல் காரணமாக பேரூந்து சாரதிக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளதுடன், பேரூந்தின் கண்ணாடிகளும் உடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதல் தொடர்பில் சம்பவ இடத்திற்குச் சென்ற வட்டுக்கோட்டை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.