வடக்கு மாகாண சபையால் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்-தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு குற்றச்சாட்டு(காணொளி)

395 0

sumanthiranவடக்கு மாகாண முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்ற விடயத்தில் வட மாகாண சபை வேண்டுமென்றே அசமந்த போக்கை கடைபிடித்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சுமத்தியுள்ளது.

வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் கொழும்பில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

வட மாகாண சபையினால் மீள்குடியேற்ற கொள்கையொன்று வகுக்கப்பட்டிருந்ததாகவும், அது வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கைகளில் முடங்கிக் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.