சர்­வதேச, உள்­நாட்டு நிபந்தனைகளுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டேன்-சஜித்

279 0

மக்கள் சேவ­கனாக அவர்­க­ளது பாதங்­களைத் தவிர வேறெந்த  சர்­வதேச அல்­லது உள்­நாட்டு நிபந்­த­னை­க­ளுக்கும் அடி­ப­ணிய மாட்டேன் என தெரி­வித்த புதிய ஜன­ நா­யக முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாச, கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்க முடி­யாமல் அரு­கி­லி­ருப்­பவர் முகத் தை பார்க்கும் காலம் வரும் வரை தான் அதி­கா­ரத்தைப் பற்றிக்கொண்­டி­ருக்கப் போவ­தில்லை என்றும் குறிப்­பிட்டார்.

புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் தேர்தல் பிர­சாரக் கூட்டம் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை உடு­நு­வர – கெலி­ஓயா நக­ரத்தில் இடம்­பெற்­றது. இந்த கூட்­டத்தில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், தற்­போது பல­ரது நிபந்­த­னை­க­ளுக்கு நான் இணங்­கி­யுள்­ள­தாக பரவலாகப் பேசப்­படு­ கி­றது. நிபந்­த­னை­க­ளுக்கு அடி­ப­ணியும் அல்­லது அதற்­காக சேவை செய்­பவன் நான் அல்ல என்­பதைத் தெரி­வித்துக் கொள்­கின்றேன். நிபந்­த­னை­க­ளுக்கு  அடி­ப­ணிந்­தி­ருந்தால் இதற்கு முன்­னரே வேட்­பா­ள­ரா­கி­யி­ருக்க முடியும்.

ஆனால் தற்­போது நான் வேட்­பா­ள­ராக நிய­மிக்­கப்­பட்­டி­ருப்­பது எவ்­வித நிபந்­த­னை­க­ளுக்கும் அடி­ப­ணிந்­ததால் அல்ல என்­பதை உறு­திப்­ப­டுத்த  விரும்­பு­கின்றேன். மக்­களின் ஆணை­யுடன் எவ்­வித நிபந்­த­னை­க­ளுக்கும் அடி­ப­ணி­யாமல் நாட்­டுக்­காக சேவை­யாற்­றுவேன். பொது­மக்­களின் நிலைப்­பா­டு­களும், அவர்­க­ளது அபி­லா­ஷை­க­ளுக்கும் அவர்­களின் கால்­களில் மாத்­திரம் அடி­ப­ணி­வேனே தவிர வேறெந்த சர்­வ­தேச அல்­லது உள்­நாட்டு நிபந்­த­னை­க­ளுக்கும் அடி­ப­ணிய மாட்டேன்.

தற்­போது நான் கூட்­டங்கள் நடத்தும் இயந்­திரம் போல் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்றேன். ஒரு நாளில் சுமார் 5 — 6 மக்கள் கூட்­டங்கள் நடை­பெ­று­கின்­றன. ஏன் இவ்­வாறு செய்­கி­றீர்கள்.

இரு தொகு­தி­க­ளுக்கு ஒரே கூட்­டத்தை நடத்­த­லாமே என்று சிலர் கேள்­வி­யெ­ழுப்­பு­கின்­றனர். நான் மக்­களிடம் செல்ல விரும்­பு­கின்றேன். அவர்­களின் சுக­ துக்­கங்­களை அறிந்த நப­ராக இருக்­கின்றேன். மக்­க­ளுக்கு பலத்தை வழங்­கு­கின்றேன். எனவே மக்கள் இல்­லாத இடத்தில் எனக்கு பலம் இல்லை என்று கரு­து­கின்றேன்.

தற்­போது எனக்கு 52 வய­தா­கின்­றது. இது நான் வேக­மாக செயற்­படும் கால­மாகும். எனினும் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்க முடி­யாத, கேள்­விகள் கேட்­கப்­படும் போது ஏனை­ய­வர்­களின் முகத்தை பார்க்கும் வயது எனக்கும் வரும். எனினும் நான் அது­வரைக் காலமும் அர­சி­யலில் இருக்கப் போவ­தில்லை. என்னால் இயன்ற வரை மக்­க­ளுக்கு சேவை செய்யக் கூடிய காலம் வரை மாத்­தி­ரமே நான் அர­சி­யலில் ஈடு­ப­டுவேன்.

அதி­கா­ரத்தைப் பற்றிக் கொண்டு செல்­லாமல் இருக்கும் அர­சி­யல்­வாதி நான் அல்ல. நான் தொடர்ந்தும் அர­சி­யலில் இருப்­ப­தற்கும், செல்­வ­தற்கும் தயா­ரா­கவே இருக்­கின்றேன். ஆனால் அதனை பொது­மக்­களே தீர்­மா­னிக்க வேண்டும். நாட்டு மக்கள் தமக்­கான ஜனா­தி­ப­தியை தெரிவு செய்யும் போது தேசிய பாது­காப்பு உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்­களை எதிர்­பார்க்­கின்­றனர். வாழ்க்கை செலவைக் குறைத்து சிறந்த வாழ்­வா­தா­ரத்தை அமைத்து தருவார் என்று எதிர்­பார்க்­கின்­றனர். இவ்­வாறு மக்­களின் அனைத்து எதிர்ப்­பார்ப்­புக்­களை பொறுப்­பேற்­ப­தற்கு நான் தயா­ராக இருக்­கின்றேன்.

உடு­நு­வர பிர­தே­சத்தில் தேயிலை உள்­ளிட்ட பல்­வேறு உற்­பத்­திகள் இடம்­பெ­று­கின்­றன. எனினும் அவற்றை சிறந்த முறையில் கொண்டு செல்­வதில் சிக்­கல்கள் ஏற்­பட்­டுள்­ளன. இவ்­வாறு அனைத்து சிக்­கல்­க­ளையும் ஒரே தட­வையில் எம்மால் நீக்க முடியும். நாட்டை பலப்­ப­டுத்த வேண்­டு­மானால் மக்­களை பலப்­ப­டுத்த வேண்டும்.

மக்­களை பலப்­ப­டுத்த பொரு­ளா­தா­ரத்தை பலப்­ப­டுத்த வேண்டும். எனினும் மக்கள் தற்­போது பொரு­ளா­தார ரீதியில் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். நான் ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­படும் பட்­சத்தில் வாழ்க்கை செலவைக் குறைத்து பொரு­ளா­தா­ரத்தை மேம்­ப­டுத்­துவேன் என்றார்.