தமிழ் கட்சிகளின் கோரிக்கையை கோத்தா நிரா­க­ரித்தமை சாதா­ரண விடயமாகும்-செஹான்

288 0

தேர்தல் வெற்­றிக்­காக தமிழ் மக்­க­ளிடம் போலி­யான வாக்­கு­று­தி­களை  வழங்கி ஏமாற்­ற­மாட்டோம்.  வடக்கு மற் றும்  கிழக்கில் தீர்க்­கப்­பட வேண்­டிய அடிப்­படை பிரச்­சி­னைகள் பல காணப்­ப­டு­கின்­றன. அவற்­றிற்கு  முழு­மை­யான  தீர்வு  குறு­கிய  காலத்­திற்குள்  வழங்­கப்­படும் என  பொது­ஜ­ன­பெ­ர­மு­னவின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் செஹான் சேம­சிங்க  தெரி­வித்தார்

வடக்கில்  தமிழ்  கட்­சிகள் இணைந்து தயா­ரித்­துள்ள 13 அம்ச திட்­டத்­தினை  பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ நிரா­க­ரித்­துள்­ளமை சாதா­ரண விட­ய­மே­யாகும்.இந்த நிரா­க­ரிப்­பினைக் கொண்டு அவர்  தமிழ் மக்­க­ளுக்க எதி­ரா­னவர் என்று கரு­து­வது முற்­றிலும் தவ­றா­ன­தாகும்.

13 அம்­சத்­திட்­டத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள  விட­யங்கள்  நிறை­வேற்­றப்­படும் என்று போலி­யான வாக்­கு­று­தி­களை வழங்கி தமிழ் மக்­களை ஏமாற்ற வேண்­டிய தேவை கிடை­யாது.  தேர்தல் வெற்­றி­யினை கருத்திற்  கொண்டு செயற்­ப­டு­வ­தாக இருந்தால்  நல்­லாட்சி அர­சாங்கம் போல் பல   வாக்­கு­று­தி­களை வழங்­கலாம்.   முடிந்த விட­யங்­களை மாத்­தி­ரமே  தேர்தல் வாக்­கு­று­தி­க­ளாக   வழங்­குவோம். இதில் தமிழ் – சிங்­கள மக்கள் என்ற வேறுப்­பாடு கிடை­யாது.

அர­சியல் தீர்வு   என்ற  விட­யத்தை குறிப்­பிட்டே ஐக்­கிய தேசிய கட்சி   தமிழ் மக்­களின் ஆத­ர­வுடன் அதி­கா­ரத்தை  கைப்­பற்­றி­யது. கடந்த  நான்­கரை வருட கால­மாக   அர­சியல் குறித்து  முன்­னெ­டுக்­கப்­பட்ட விட­யங்கள் அனைத்தும் பய­னற்­ற­தா­னது. ஒரு  தரப்­பி­ன­ருக்கு  சாத­க­மாக செயற்­படும் போது அதன் எதிர்­வி­ளைவு  பிறி­தொரு தரப்­பி­ன­ருக்கு  தாக்கம் செலுத்­து­வ­தாக காணப்­பட்­டது.

நல்­லாட்சி அர­சாங்கம் அர­சியல் தீர்வு என்ற விட­யத்தை குறிப்­பிட்டே கடந்த  நான்­கரை வருட கால­மாக தமிழ் மக்­களை ஏமாற்­றி­யுள்­ளது.

அர­சாங்­கத்தில் முக்­கிய   பொறுப்­பிலும்,   அந்­தஸ்த்­திலும் இருந்த தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு  தமிழ் மக்­களின் அடிப்­படை பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண­வில்லை. மாறாக தேவை­யற்ற விட­யங்­க­ளுக்கே    முக்­கி­யத்­துவம் கொடுத்­தார்கள்.இறு­தியில் அர­சியல் தீரவு  கிடைக்கப் பெற­வில்லை. வடக்கு கிழக்­கிற்கு அபி­வி­ருத்­தியும் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. இதில்  ஏமாற்­ற­ம­டைந்­தது தமிழ் மக்கள் மாத்­தி­ர­மே­யாகும்.

தமிழ்­அ­ர­சியல் தலை­மைகள் சுய நல போக்­கு­டனே செயற்­ப­டு­கின்­றார்கள். அதன் கார­ண­மா­கவே  தமிழ் மக்­களின் ஆத­ர­வினை கோரு­கின்றோம். எத்­த­ரப்­பி­னரும் முரண்­ப­டாத வகையில் வடக்கு மற்றும் கிழக்கில் அபிவிருத்திகளை  முன்னெடுப்போம் என்பதில் எவ்வித மாற்று கருத்துக்களும் கிடையாது.

தமிழ் மக்கள்   பொது யதார்த்த நிலைமையினையும்,  நல்லாட்சி அரசாங்கத்தில் ஏமாற்றப்பட்டதையும் புரிந்துக் கொண்டு அரசியல் ரீதியில் தீர்மானங்களை  முன்னெடுக்க வேண்டும் என்றார்.