சிறுபான்மை கட்சிகளின் நிபந்தனைகளுக்கு கீழ்ப்படிந்து அரசாங்கம் ஒருபோதும் செயற்பட்டதில்லை. அனைத்து இன மக்களும் ஒரு தாய் மக்களாக வாழவேண்டும் என்பதே எமது நோக்கம் என்று அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். கொழும் பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரசாங்கம் சிறுபான்மை மக்களின் தேவைக்கேற்ற முறையில் செயற்படுவதில்லை. சிறுபான்மை கட்சிகளின் நிபந்தனைக்கு கீழ்ப்படிந்து செயற்படுவதும் இல்லை. அரசாங்கம் சிறுபான்மை கட்சிகளின் நிபந்தனைகளுக்கு கீழ்ப்படிந்து வாக்குகளை பெற்றுக்கொள்வதாக எதிரணி பொய்ப் பிரசாரம் மேற்கொண்டுவருகின்றது. 2015இல் நாங்கள் அதிகாரத்துக்கு வரும்போதும் இந்த குற்றச்சாட்டையே அவர்கள் தெரிவித்து வந்தனர். ஆனால் இதுவரை நாட்டுக்கு தீங்கான ஏதாவது இடம்பெற்றிருக்கின்றதா?, சிறுபான்மை மக்களுக்கு தேவையான முறையில் செயற்பட்டதா? எதுவுமே இடம்பெறவில்லை.
மேலும் எமக்கு தேவையாக இருப்பது ஒற்றுமையாகும். சிங்கள, தமிழ், முஸ்லிம், பேகர் மற்றும் மலாய் என அனைத்து இன மக்களும் இது எனது நாடு என பெருமையுடன் வாழக்கூடிய நாடே எமக்கு தேவை. பெளத்தத்துக்கு முன்னுரிமை வழங்கி ஏனைய மதங்களுக்கு சம உரிமை வழங்கி செயற்படும் நாட்டை கட்டியெழுப்பு வதே எங்களுக்கு தேவையாக இருக்கின்றது.
அத்துடன் எமது எதிர்த்தரப்பினர் எமக்கெ திராக என்ன விமர்சனங்களை முன்வைத்தாலும் நாங்கள் 5 வருடங்கள் ஆட்சியை கொண்டு செல்கின்றோம். இதுவரை காலத் தில் நாட்டின் ஒரு அங்குலமேனும் இல்லாமல் போயிருக்கின்றதா? வேறு ஏதாவது நட்டம் ஏற்பட்டிருக்கின்றதா? நாங்கள் ஒரு போதும் நிபந்தனைகளுக்கு கீழ்ப் படிந்து செயற்படுவதில்லை. அவ்வாறு செயற்படு வதற்கு எமக்கு எந்த தேவையும் இல்லை என்றார்.