SLPP-SLFP இடையிலான மற்றுமொரு உடன்படிக்கை இன்று

322 0

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்படவுள்ளது.

இன்று காலை கொழும்பில் இந்த ஒப்பந்தம் இடம்பெறவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பெற்ற 51 லட்சம் வாக்குகளும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பெற்ற 14 லட்சம் வாக்குகளும் இணையும் போது கோட்டாபய ராஜபக்ஸவின் வெற்றி உறுதியாவதாகவும் வீரகுமார எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.