புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு மூன்று ஊடக செய்தித் தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர் மங்கள சமரவீர, பிரதி அமைச்சர் நளின் பண்டார, இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க ஆகியோரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் காலங்களில் சஜித் தொடர்பான அனைத்து அறிக்கைகளும் இந்த மூவரின் ஊடாகவே வெளியிடப்படுமென கூறப்படுகின்றது.

