கம்பஹா பகுதியில் உள்ள நிதி நிறுவனமொன்றில் சுமாமர் 560 மில்லியன் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ் குறித்த நிதி நிறுவனத்தின் தலைவரை சி.ஐ.டி.யினர் என அழைக்கப்படும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
குறித்த நிதி நிறுவனத்தில் வைப்பிலிட்ட 120 நபர்களுடைய பணத்தையே சந்தேக நபர் மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் நேற்று மாலை கைதுசெய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் அவரை கம்பஹா நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.