லசந்த விக்கிரமதுங்கவின் கொலை – மேலும் 12 பேரிடம் விசாரணை

278 0

lasantha-1-450x285ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பில் மேலும் பலரிடம் வாக்கு மூலம் பெறவேண்டியுள்ளதாக இரகசிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, மேலும் 12 புலனாய்வு அதிகாரிகளிடம் வாக்குமூலம் பெறவேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் உரிய தரப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இரகசிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறயினும், குறித்த 12 பேரையும் விசாரணை செய்வதற்கான அனுமதி இன்னும் கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கொலை தொடர்பில் இராணுவ புலனாய்வு அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில் மற்றும் ஒரு புலனாய்வு அதிகாரி தாமே அந்த கொலை செய்ததாக தெரிவித்து தற்கொலை செய்துக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதன்பின்னர் தடுத்துவைக்கப்பட்டிருந்த புலனாய்வு அதிகாரி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க, 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.