நாட்டில் நெடுங்­கா­ல­மாக ஜன­நா­ய­கத்தின் அடை­யா­ள­மாகத் திகழ்ந்­து­ வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்­சியை முற்­றாக அழித்து, குடும்ப ஆட்­சியை மேலோங்கச் செய்­வ­தற்கு சிலர் முயற்­சிக்­கின்­றார்கள். எனினும் சுதந்­திரக் கட்­சியை உண்­மையில்  நேசிப்­ப­வர்­களும், சுய­கௌ­ரவம் இருப்­ப­வர்­களும் எமது வேட்­பா­ள­ருக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தற்கு முன்­வந்­தி­ருக்­கி­றார்கள். எதிர்­கா­லத்தில் மேலும் பலர் எம்­மோடு இணைந்­து­ கொள்­வார்கள் என்று பொது நிர்­வாக, அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சர் ரஞ்சித் மத்­தும பண்­டார தெரி­வித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி, ஈழ­மக்கள் ஜன­நா­யகக் கட்சி, உள்­ளிட்­ட­வற்றின் பிர­தேச, நக­ர­சபை உறுப்­பி­னர்கள், தொகுதி அமைப்­பா­ளர்கள், பிர­தேச ஒருங்­கி­ணைப்­பா­ளர்கள் 44 பேர் புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ஸ­வுக்கு ஆத­ரவு தெரி­வித்து நேற்று உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அவ­ருடன் இணைந்­து­ கொண்­டனர்.

இது­ கு­றித்து தெளி­வு­ப­டுத்தும் வகையில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை கொழும்­பி­லுள்ள புதிய நகர மண்­ட­பத்தில் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. அங்கு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறி­ய­தா­வது:

எமது புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­சவை வெற்றி பெறச் ­செய்­வ­தற்­காக எம்­மோடு இணைந்து கொண்­ட­வர்­க­ளுக்கு நன்­றி யைத் தெரி­வித்துக் கொள்­கின்றோம். நாட்டில் பல்­வேறு புதிய கட்­சிகள் உரு­வா­கிய  போதிலும் ஜன­நா­ய­கத்தின் அடை­யா­ள­மாக தொடர்ந்தும் ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி ஆகி­யன இருந்­து­ வ­ரு­கின்­றன. ஆனால் அவ்­வா­றா­ன­தொரு சிறந்த வர­லாற்றைக் கொண்ட சுதந்­திரக் கட்­சியை நாச­மாக்கி, குடும்ப ஆதிக்­கத்தை மேலோங்கச் செய்­வ­தற்கு சிலர் திட்­ட­மி­டு­கின்­றனர்.

ஆனால் சுதந்­திரக் கட்­சியை உண்­மையில்   நேசிப்­ப­வர்­களும், சுய­கௌ­ரவம் இருப்­ப­வர்­களும் எமக்கு ஆத­ர­வ­ளிக்க முன்­வந்­தி­ருக்­கின்­றார்கள். எனக்கும், விஜித் விஜ­ய­முனி சொய்­சா­வுக்கும் இடையில் கடந்த காலத்தில் பல்­வேறு முரண்­பா­டுகள் காணப்­பட்­டன. ஆனால் தற்­போது நாங்கள் இரு­வரும் ஒன்­றி­ணைந்­தி­ருக்­கிறோம். எம்மால் ஒன்­றி­ணைய முடி­யு­மென்றால் வேறு எவ­ராலும் எம்­மோடு இணைய முடியும் என்றே அர்த்தம். நாம­னை­வரும் குடும்ப ஆட்­சி­யொன்று நாட்டில் உரு­வா­கு­வதை எதிர்க்­கின்றோம். ஏகா­தி­பத்­தி­ய­வா­தத்தை முழு­மை­யாக ஒழித்து, நாட்டில் ஜன­நா­ய­கத்தை நிலை­நாட்­டு­வதே எம்­மு­டைய எதிர்­பார்ப்­பாகும் என்றார்.

மின்­சாரம், சக்­தி ­வலு மற்றும் திட்ட அபி­வி­ருத்தி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க  குறிப்­பி­டு­கையில்,

நாம­னை­வரும் ஒன்­றி­ணைந்து கடந்த 2015ஆம் ஆண்டு வென்­றெ­டுத்த ஜன­நா­ய­கத்தைப் பாது­காத்துக் கொள்­வது அவ­சி­ய­மாகும். அத­னூ­டாக மக்­களை வெற்றி பெறச்­செய்­வதே எம்முடைய ஒரே குறிக்கோளாக இருக்கின்றது. கடந்த

5 வருட காலத்தில் ஜனநாயகத்தைப் பாதுகாத்ததன் ஊடாக எதனைச் சாதித்தீர்கள் என்று சிலர் எம்மிடம் கேள்வி எழுப்புகின்றனர். அந்த ஜனநாயகத்தின் விளைவாகவே இன்று அனைவரும் சுதந்திரமாக செயற்பட முடிகிறது என்பதை மனதிலிருத்திக்கொள்ள வேண்டும் என்றார்.