யாழில் இளைஞர் ஒருவர் கோடரியால் அடித்துக் கொலை

209 0

குடும்பத் தகராறு காரணமாக இளைஞர் ஒருவர் கோடரியால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம், அரியாலை – மணியம் தோட்டம் பகுதியில் இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் மணியந்தோட்டம் 5ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த  33 வயதான கொன்ஸ்ரன் கலஸ்ரன் என்பவரே கொலை செய்யட்டுள்ளார்.

மணியந்தோட்டம் 3ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த உறவினரே கொலை செய்தார் என்று விசாரணைகளில் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

“கொழும்புத்துறை பகுதியில் உள்ள நபர் ஒருவருக்கும், உயிரிழந்தவருக்கும் இடையில் நீண்டகாலமாக மோதல் நிலை இருந்தது.  நேற்று வாய்த்தர்க்கம் முற்றி கைகலப்பாக மாறியது.

அந்த நபர் கோடரியால் இளைஞரின் தலையில் அடித்துள்ளார். தலையில் பலமாக அடிப்பட்டதால், சம்பவ இடத்திலேயே இளைஞர் உயிரிழந்துள்ளார்” என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.