மின்சாரம் தாக்கி இரு மாடுகள் பலி !

208 0

கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் மின்சாரம் தாக்கி இரு மாடுகள்  உயிரிழந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை பதிவாகியுள்ளது. கண்முன்னே வளர்த்த மாடுகளைக் காப்பாற்றச் சென்ற உரிமையாளர் தப்பியுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மாலை நேரம் முழங்காவில் பகுதியின் மன்னார் யாழ் வீதியில் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள மின்மாற்றி (ரான்ஸ்போமர்) யிலிருந்து மின்சாரம் பாய்ந்துள்ளது. குறித்த நேரம் அப்பகுதியில் மழையும் பெய்துகொண்டிருந்த நிலையில் குகுறித்த மாடுகள் இரண்டினையும் மின்சாரம் தாக்கியுள்ளது.

கண்முன்னே மாடுகள் போராடுவதை அவதானித்த உரிமையாளர் காப்பாற்ற முற்பட்டபோது அப்பகுதியில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் நின்ற பொலிஸார் அவரை பாதுகாத்துள்ளனர். மின்சாரம் பாய்ந்ததில் இரண்டு மாடுகளும் உயிரிழந்துள்ளன. உயிரிழந்த மாடுகளின் பெறுமதி சுமார் 150,000 ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது.