தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் – ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுக்கிடையில் முக்கிய சந்திப்பு

192 0

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கும் ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுக்குமிடையில் நேற்று முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான செலவு அதிகரிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதிக்குள் அச்சிடும் வேலைகளை நிறைவுக்குக் கொண்டுவருதல் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.