கொழும்பு துறைமுகத்தில் சடலம் மீட்பு!

186 0

கொழும்பு துறைமுக நுழைவாயிலில் நீரில் மீதந்து கொண்டிருந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

மேற்கு கடற்படை கட்டளை, கொழும்பு துறைமுக நுழைவாயிலில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போதே,  நீரில் மிதந்துக்கொண்டிருந்த  சிதைந்த நிலையில்  சடலத்தை மீட்டுள்ளனர்.

அத்தோடு மீட்கப்பட்ட சடலத்தை உடனடியாக கரைக்கு கொண்டு வந்த நிலையில் மேலதிக நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுக பொலிஸாருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.