சஜித், கோத்தாவினால் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க முடியாது – ஜே.வி.பி.

163 0

சஜித் பிரமதாசவும், கோத்தாபய ராஜபக்ஷவும்  பொய்யான வாக்குறுதிகளை வழங்கி  மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற முற்படுகின்றனர். இவர்களிருவருமே ஒரே அரசியல் கூட்டத்தைச் சேரந்தவர்களே ஆவர். எனவே இவர்களில் யார் ஆட்சிக்கு வந்தாலும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.

அத்துடன் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றால் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு இம்முறை தேர்தலில் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பத்தரமுல்லையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.