எல்­பிட்­டிய பிர­தேச சபைத் தேர்­தலில் மக்கள் உய­ரிய ஆத­ரவை வழங்க வேண்டும் – சஜித்

269 0

சுபீட்­ச­மா­ன­தொரு இலங்­கையை உரு­வாக்கும் பய­ணத்தை முன்­னெ­டுப்­ப­தற்­கான ஆத­ரவும், பலமும் எமக்கு அவ­சி­ய­மாகும். எனவே எல்­பிட்­டிய பிர­தேச சபைத் தேர்­தலில் மக்கள் தமது உய­ரிய ஆத­ர­வையும், ஒத்­து­ழைப்­பையும் எமக்கு வழங்­க­வேண்டும். அத­னூ­டாக எம்மைப் பலப்­ப­டுத்தி எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் நாட்டை மீட்­டெ­டுக்­கத்­தக்க, துடிப்­பான, இளைய தலை­மைத்­து­வத்தை உரு­வாக்­கு­வ­தற்குப் பங்­க­ளிப்புச் செய்ய வேண்டும் என்று ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாச எல்­பிட்­டிய மக்­க­ளிடம் கேட்­டுக்­கொண்டார்.

ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான வேட்­பு­ம­னுத்­தாக்­கலின் பின்னர் நேற்று திங்­கட்­கி­ழமை பெந்­தர, எல்­பிட்­டிய பிர­தே­சத்தில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த கூட்­ட­மொன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறி­ய­தா­வது:
இம்­முறை ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான வேட்­பு­மனுத் தாக்­கலின் பின்னர் நான் முத­லா­வ­தாக விஜயம் மேற்­கொள்ளும் தேர்தல் ஆசனம் பெந்­தர எல்­பிட்­டிய ஆச­ன­மாகும். இந்த நாட்டில் பல்­வேறு துன்­பங்­களை அனு­ப­வித்துக் கொண்­டி­ருக்கும் உங்­களின் எதிர்­பார்ப்­புக்­களைப் பூர்த்தி செய்­யக்­கூ­டிய புதிய பய­ண­மொன்­றுக்­கான, புதிய எதிர்­கா­ல­மொன்­றுக்­கான, பய­னுள்ள மக்கள் சேவைக்­கான, நாட்டின் அபி­வி­ருத்­தியினை நோக்­கி­ய­தாக, ஒரு­மித்த நாட்டை மேலும் வலுப்­ப­டுத்­து­கின்ற நகர்­வுக்­கான ஆரம்­பமே இது­வாகும்.

நாம­னை­வரும் எதிர்­பார்ப்­பது சுபீட்சம் நிறைந்­த­தொரு இலங்­கை­யையே ஆகும். நாட்டில் பொரு­ளா­தார அபி­வி­ருத்­தியை ஏற்­ப­டுத்­து­வதன் ஊடாக சாதா­ரண பிர­ஜை­யொ­ரு­வரின் உள்­ளத்தில் நிறைவை ஏற்­ப­டுத்தும் யுகத்தை உரு­வாக்­கு­வதே அனை­வ­ரி­னதும் விருப்­ப­மாக இருக்­கி­றது. அந்தப் புதிய யுகத்தை நாங்கள் ஆரம்­பிக்­கின்றோம். அதில் இந்­நாட்டின் அனைத்துப் பிர­ஜை­க­ளுக்கும் முக்­கி­யத்­துவம் வழங்­கப்­படும். அந்தப் புதிய யுகத்தில் நாம் தனி­யொரு குடும்­பத்தை முன்­நி­றுத்­து­வதை விடுத்து, இந்த ஒட்­டு­மொத்த நாட்­டிற்கும் முதன்­மை­யான இடத்தை வழங்­குவோம். அதன்­மூலம் வீழ்ந்­தி­ருக்கும் இந்த நாட்டை மீட்­டெ­டுப்போம்.

அத்­த­கை­ய­தொரு பய­ணத்தை முன்­னெ­ டுப்­ப­தற்­கான சக்­தியும், பலமும் எமக்கு அவ­சியம். எனவே இந்த எல்­பிட்­டிய தொகு­திக்­கான பிர­தேச சபைத் தேர்த லில் உங்களால் இயலுமான உயர்ந்த ஆதரவையும், ஒத்துழைப்பையும் எமக் குப் பெற்றுத்தாருங்கள். அதன்மூலம் என்னை மேலும் பலப்படுத்தி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு துடிப்பான, சிறந்த, இளைய தலைமைத்துவத்தை உருவாக்குவதற்கு ஒன்றிணையுமாறு கேட் டுக்கொள்கின்றேன்