கோத்தாபயவுக்கு எதிராக மனுத்தாக்கல்

220 0

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

பேராசிரியர் சந்திரகுப்த தேநுவர மற்றும் காமினி வியன்கொட ஆகியோரே குறித்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

கோத்தாபய ராஜபக்ஷ இலங்கையின் பிரஜையாக ஏற்றுக் கொள்வதை இடை நிறுத்துமாறு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவுக்கு உத்தரவொன்றை நீதிமன்றம் பிறப்பிக்கக் கோரி குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.