கொக்கரெல்ல பகுதியில் மோதல்: ஒருவர் பலி !

197 0

கொக்கரெல்ல பகுதியில் இருவருக்கிடையில் இடம்பெற்ற மோதலின் போது தாக்குதலுக்குள்ளான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொக்கரெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெல்சிபுர பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும்  எரிவாயு நிறப்பு நிலையத்தில் நேற்றிரவு 11 மணியளவில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கட்டட நிர்மாண பணிகளில் ஈடுப்பட்டு வரும் இரு நபர்களுக்கிடையில் எற்பட்ட முரண்பாட்டை அடுத்து மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இதன்போது படுகாயமடைந்த நபரொருவர் கொக்கரெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

மாவத்தகம பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய சஞ்ஜீவ பிரேமபந்து என்பவரே இவ்வாறு உயிரிழந்துளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்