அநுரவிற்கு ஆதரவாக ஹட்டனில் தேர்தல் பிரசாரம்!

193 0

‘தேசிய மக்கள் சக்தியின்’ ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்கவுக்கு ஆதரவு தெரிவித்து ஹட்டனில் தேர்தல் பிரசார கூட்டம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் மக்கள் விடுதலை முன்னணியின் நுவரெலியா மாவட்ட அமைப்பு குழு தலைவர் மஞ்சுள சுரவீர, அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்க தலைவர் கிட்னண் செல்வராஜ், எழுத்தாளர் அன்டனி ஜீவா, விரிவுரையாளர் விஷ்வநாதன் சதாநந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்துடன், மலையக பகுதிகளிலிருந்து வந்த ஆயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் இந்த தேர்தல் பிரசார கூட்டம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் ‘தேசிய மக்கள் சக்தி’ போட்டியிடவுள்ள சின்னம் குறித்த அறிவிப்பு அடுத்த வாரமளவில்வெளியிடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஒக்டோபர் 7 ஆம் திகதி இடம்பெறும் எனவும் அன்றைய தினம் காலை 9 மணி முதல் 11 வரையான காலப்பகுதியில் வேட்பு மனுக்கல் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.