கிளிநொச்சியில் பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கியவர் கைது(காணொளி)

307 0

sequence-02-still038கிளிநொச்சியில் நேற்றையதினம் பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று கிளிநொச்சி ஏ-9 வீதி வைத்தியசாலைப் பகுதியில் பொலிஸார் மற்றும் இளைஞர்களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதை அடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்த நிலையில், குறித்த பகுதியில் கடமையில் இருந்த பொலிஸார் ஒருவர் மீது இனம் தெரியாத நபர் ஒருவரால் தாக்குதல் நடத்தப்பட்டு காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பொலிசாரை தாக்கியதாக சந்தேகிக்கப்படும் தர்மபுரம் கட்டைக்காட்டுப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரை தர்மபுரம் மற்றும் கிளிநொச்சிப் பொலிசார் இணைந்து இன்று பிற்பகல் கட்டைக்காடுப் பகுதியில் வைத்துக் கைது செய்துள்ளனர்.

கைது செய்த சந்தேகநபரை வைத்திய பரிசோதனையின்பின் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தியத்தை அடுத்து, குறித்த சந்தேகநபரை எதிர்வரும் முப்பத்தோராம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.