தோட்டத்தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் விளக்கப்படவில்லை-அருட்தந்தை சக்திவேல்(காணொளி)

372 0

sequence-02-still043கூட்டு ஒப்பந்தத்தில் அடக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து தோட்டத்தொழிலாளர்களுக்கு விளக்கமளிக்கப்படாத செயற்பாடு மனித உரிமையை மீறும் செயல் என்று அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார்.

எனவே இவ்விடயம் தொடர்பில் கொழும்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆலோசனைகளைப் பெற்றுள்ளதாகவும், இது தொடர்பில் தொழில் திணைக்களத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்யவுள்ளதாகவும் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார்.