யாழ் சாவகச்சேரியில் தடுக்கப்பட்ட வெளிமாவட்ட வர்த்தகர்கள் (காணொளி)

364 0

sequence-02-still036யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரசபையில் இன்று வெளிமாவட்ட வர்த்தகர்கள் வியாபார நடவடிக்கையில் ஈடுபட முனைந்தபோது அப்பகுதி வர்த்தகர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
தீபாவளியை முன்னிட்டு வெளிமாவட்ட வர்த்தகர்கள் சாவகச்சேரி நகரசபையில் வர்த்தக நடவடிக்கையை மேற்கொள்வதற்காக வருகைதந்த நிலையில் குறித்த பிரதேச வர்த்தகர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதனையடுத்து வெளிமாவட்ட வர்த்தகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து தமக்கு நீதி கிடைக்கக் கோரி நீதிமன்றை நாடவுள்ளதாகவும் வெளிமாவட்ட வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.