கோண்டாவில் வீட்டில் புகுந்து வாள்வெட்டு கும்பல் அட்டகாசம்

401 0

யாழ்ப்பாணம், கோண்டாவில், அன்னுங்கை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

இந்த சம்பவம் இன்று  இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், கோண்டாவில் அன்னுங்கை பகுதியைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி ஒருவரின் வீட்டிற்கு இரு மோட்டார் சைக்கிகளில் நான்கு பேர் கொண்ட குழுவினர் முகங்களை மூடியவாறு சென்றுள்ளனர்.

அவர்கள் வீட்டின் யன்னல்களை அடித்து நொறுக்கியதுடன் வீட்டில் தரித்து நின்ற முச்சக்கர வண்டியையும் அடித்து நொறுக்கிவிட்டு வீட்டில் இருந்தவர்களை வாள்களை காட்டி அச்சுறுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதையடுத்து வீட்டுக்கரரின் அவலக் குரல் கேட்டு அப்பகுதி இளைஞர்கள் குறித்த மர்மக் கும்பலை துரத்திய போதும் அவர்கள் தப்பி விட்டனர். இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளதுடன் இது தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.