வெகுவாக பரவி வரும் கம்பளிப்பூச்சி

343 0
கம்பளிப்பூச்சியின் தாக்கம் காரணமாக ருவன்வெல்ல மற்றும் வஹரக ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

கடந்த பல வாரங்களாக ருவன்வெல்ல, வஹரக மற்றும் தாலுவலன போன்ற இடங்களில் கம்பளிப்பூச்சி வெகுவாக பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தாம் பயிறிடும் பயிர்களிலும் கம்பளிப்பூச்சிகள் பரவியுள்ளதாக தெரிவிக்கும் மக்கள் இதனால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பில் கேகாலை மாவட்ட விவசாய பதில் பணிப்பாளுருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து கண்னொருவ தாவரவியல் பாதுகாப்பு பிரிவினர் குறித்த பகுதிக்கு விஜயம் ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.

அவர்களின் தகவலுக்கமைய இதற்கு முன்னர் காலி மாவட்டத்தில் இந்த வகை கம்பளிப்பூச்சி பரவியமை தெரிய வந்துள்ளது.