தங்கொட்டுவையில் இடம்பெற்ற பஸ் , முச்சக்கர வண்டி ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிலாபம் – பன்னல வீதியின் தங்கொட்டுவ பகுதியிலேயே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அத்தோடு சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.