கல்முனையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்முணை – துர்ந்தியமேடு பிரதேசத்தின் ஊடகா வேகமாக சென்ற மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
அதி வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதிலேயே இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு உயிரிழந்த நபர்கள் 19 வயது மற்றும் 30 வயதுடையவர்கள் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

