ஆயுதங்கள் வைத்திருப்பதாக கூறி கைதான சந்தேக நபருக்கு விளக்கமறியல்

272 0

சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருப்பதாக கூறி கைதான சந்தேக நபர்  14 நாட்கள்  விளக்கமறியலில்  வைக்கப்பட்டுள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை(27) இரவு குறித்த சந்தேக நபரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்து கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்ற நிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் கல்முனை நீதவான் நீதிபதி முன்னிலையில்  ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் செப்ரம்பர் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

இவ்வாறு சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு  கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தனியார் நிறுவனம் ஒன்றின் விற்பனை பிரதேச முகாமையாளராக கடமையாற்றி வருபவராவார்.

கல்முனை பொலிஸ் பிரிவில் உள்ள  288\ஏ மாரியம்மன் கோயில் வீதி   பாண்டிருப்பு -2 பகுதி முகவரியைக் கொண்ட தில்லைநாதன் ஆனந்தராஜ்(வயது-41) என்பவரே  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது.