புத்தள வனப் பகுதியில் பரவியுள்ள தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பிரதேச மக்கள்

239 0

புத்தள, வெலன் ஆரகந்த வனப்பகுதியில் நேற்றிரவு தீ பரவியதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்தோடு அப்பகுதியில் ஏற்பட்ட தீயினை கட்டுப்படுத்துவதற்காக அப்பகுதியில் இயங்கி வரும்  தொழிற்சாலையொன்றின் பௌசர் வண்டி ஒன்று பயன்படுத்தப்பட்டுள்ளதோடு , பிரதேசமக்களின் உதவியுடன் பொலிஸாரும் ஒன்றிணைந்து தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம்  தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் தீ பரவலினால் எவ்வித உயிர் ஆபத்துக்களும் ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.