பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று வாக்குமூலம் வழங்குவதற்காக ஆஜர் ஆகியுள்ளார்.
விவசாயத்துறை அமைச்சுக்கான கட்டிடத்தை குத்தகை அடிப்படையில் பெற்றுக் கொள்வதற்காக பிரதமரால் சமர்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துக் கொள்வதற்காக அவர் இன்று ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இந் நிலையிலேயே அவர் இன்று ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராக வாக்மூலம் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

