ஜனாதிபதி மறுக்காது தெரிவுக்குழுவில் சாட்சியமளிக்க வேண்டும் ; மகேஷ் சேனாநாயக்க

198 0

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் நாட்டின் பிரஜை என்ற அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறுப்பு தெரிவிக்காது சாட்சியமளிக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என்று முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்தார்.

கண்டி – தலதா மாளிகையில் மத வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் இன்று  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.