தேர்தலில் போட்டியிட தடையில்லை

213 0

“ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தனக்கு எந்த தடைகளும் இல்லை” என, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுடன் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

தான் ஏற்கெனவே அமெரிக்க குடியுரிமையை கைவிட்டுள்ளதாகவும் தற்போது இலங்கை கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிலர் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவதைத் தடுக்கும் முயற்சியில் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.