தபால் மூல வாக்களிப்புத- விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை ஆரம்பம்

582 0

எதிர்வரும் தேர்தலுக்கான தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் வாரம் முதல் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கும் பிரதித் தேர்தல்கள் ஆணையாளருக்கும் இடையில் நாளை (வெள்ளிக்கிழமை) கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. இதன்போது எதிர்வரும் தேர்தல் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளது.

நாட்டில் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்களை ஒவ்வொரு கட்சியினரும் அறிவித்து வரும் நிலையில், ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் தினம் தொடர்பாக இதுவரையில் உத்தியோப்பூர்வ திகதி அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.