ஹெரோயினுடன் இருவர் கைது

304 0

தலைமன்னார், பியர்கம பகுதியில் 210 கிராம் ஹெரோயினுடன் 2 பேரை கடற்படையினர் நேற்று (21) கைது செய்துள்ளனர்.

தலைமன்னார், பியர்கம கடற்கரை பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது ஹெரோயின் வைத்திருந்த 2 பேரையும் அவர்கள் பயன்படுத்திய டிங்கி படகையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கடற்படையினரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் நீர்கொழும்பு மற்றும் தலைமன்னார் பகுதிகளைச் சேர்ந்த 31 மற்றும் 42 வயதுடைய தமிழ் மற்றும் சிங்களவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் இவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.