இலங்கை மீனவர்கள் புழல் சிறையில்

327 0

tamil_daily_news_17096674443இலங்கையின் மூன்று மீனவர்கள் தமிழகம் ராமேஸ்வரம் கடல்பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

இவர்களின் படகு எரிபொருள் இன்றி கரையொதுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்து.

எனினும் இவர்கள் மீது இந்திய கடலுக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டு இந்திய தரப்பினால் சுமத்தப்பட்டுள்ளது.

வவுனியாவை சேர்ந்த ஆர் அருள்நேசன், ஆர் தேவதாசன் மற்றும் தலைமன்னாரின் வி.விஜி ஆகியோரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மூவரும் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவர்களை நவம்பர் 5ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

இந்தநிலையில் அவர்கள், சென்னை புழல்சிலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.