யாழ்.வாள்வெட்டுச் சம்பவத்திற்கு உரிமை கோரி துண்டுப்பிரசுரம்!

316 0

nmm2-241x300யாழ்.சுன்னாகம் பகுதியில் பொலிஸ் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு சம்பவத்திற்கு உரிமைகோரி ஆவா குழு என்ற அடையாளப்படுத்தலுடன் யாழ்.நகர பகுதியில் துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாத சிலரினால் இந்த பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. துண்டு பிரசுரத்தில் அசுத்தங்கள் அகற்றப்படும் என்ற தலைப்பில் சுன்னாகம்தாக்குதல் சம்பவத்திற்கு உரிமை கோரப்பட்டுள்ளதுடன் தாம் சில அசுத்தங்களுக்கு எதிராகவே செயற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.