காவல்துறை மீதான தாக்குதல் – விசாரிக்க குழு

336 0

133யாழ்பாணம் சுன்னாகம் பகுதியில் குடியியல் உடையில் இருந்த இரண்டு காவ்துறை அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஐந்து பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை குழு ஒன்றும் அதில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுன்னாகம் நகரில் நேற்றைய தினம் அடையாளம் தெரியாத சிலர் வியாபார நிலையங்களில் கப்பம் பெற முயற்சித்துள்ளனர்.

இதன்போது, காவல்துறை அதிகாரிகள் மூவர் இதனை தடுக்க முயற்சித்துள்ளனர்.

இதனை அடுத்து, அடையாளம் தெரியாதவர்கள் காவல்துறை அதிகாரிகள் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.