இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கப்படவில்லை.

309 0

blog6இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவது இல்லையென குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் உள்ள புலம் பெயர்ந்த அமைப்பான உலக தமிழ் கூட்டமைப்பினால் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் ராணுவத்தை அகற்றுவதற்கும் மக்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டுவருவதற்கும் அரசாங்கம் துரிதமாக செயற்படுவதில்லை.

இதனால் தமிழ் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இலங்கை வந்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை விவகார பிரதிநிதி அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள் மூலம் தமிழ் மக்களின் அதிருப்தியான மனநிலை வெளிப்படுவதாகவும் உலக தமிழ் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.