ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் கட்சிக்குள் பிளவுகள் இல்லை. கூட்டணி அமைத்த அன்றைய தினமே ஜனாதிபதி வேட்பாளரையும் அறிவிப் போம். கரு, சஜித் ஆகியோரின் பூரண ஒத்துழைப்புடன் வேட்பாளர் ஒருவர் அறிவிக்கப்படுவார் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் என்னை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கினால் எனது கடமையைச் சரியாக நிறைவேற்றிக் காட்டுவேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற புகைப்பட கண்காட்சி நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அமைச்சர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் கூறுகையில்,
ஐக்கிய தேசிய கட்சிக்குள் குழப்பங்கள் எதுவும் இல்லை. கட்சிக்குள் பிளவுகள் உள்ளதாக கூறினாலும் அவ்வாறான எந்தப் பிளவுகளும் ஏற்படவில்லை. கூட்டணி அமைப்பது குறித்தே பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கூட்டணிக்கான யாப்பினை உருவாக்குவது குறித்து கடந்த சில வாரங்களாக பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த வாரமும் நாம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தோம். அத்துடன் கூட்டணியின் சார்பில் வேட்பாளர் ஒருவரை களமிறக்கி வெற்றிபெறச் செய்வதே எமது நோக்கமாக உள்ளது. அதற்கான முயற்சிகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.
கூட்டணி அமைக்கும் அன்றைய தினமே கூட்டணியின் சார்பில் எமது ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதையும் அறிவிப்போம். சஜித் பிரேமதாசவின் முழுமையான ஒத்துழைப்புடன் எமது வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம். கரு, சஜித் ஆகியோரின் பூரண இணக்கத்துடன் எமது வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.
என்னை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தால் கூட எனது கடமையை சரியாக நான் செய்து முடிப் பேன். ஆனால் இந்த ஆட்சி ஒருபோதும் குடும்ப ஆட்சியாக மாறக்கூடாது. அதற்கு நாம் இடமளிக் கக்கூடாது. இந்த ஜனாதிபதி தேர்தலுடன் குடும்ப ஆட்சியாளர்களின் அதிகாரங்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்பது மாத்திரம் உறு தியாகக் கூட முடியும் என்றார்.