பல்கலைக்கழக மாணவர்கள் மாவட்டச் செயலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம்!

333 0

download-9-1யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், நீதிகோரியும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தற்போது யாழ் மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் அமர்ந்து அமைதியான முறையில் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த 21ஆம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களான கஜன் மற்றும் சுலக்சன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கருகில் யாழ்ப்பாணக் காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.

மாவட்டச் செயலகத்துக்கு முன்னால் அனைத்துமாணவர்களும் அமர்ந்திருப்பதால் மாவட்டச் செயலகத்துக்குள் ஊழியர்கள் எவரும் செல்லமுடியாது வெளியில் காத்திருப்பதாகவும் தெரியவருகின்றது.

அத்துடன், ஆளுநர் செயலகமும் மாணவர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.