கிளிநொச்சியில் பல்கலை மாணவன் கஜனின் இறுதி ஊர்வலம்(காணொளி)

395 0

the-two-killed-university-studentsகிளிநொச்சியில் பெரும் திரளானவர்கள் புடைசூழ நடராஜா கஜனின் இறுதி ஊர்வலம் இன்று இடம்பெற்றது.

யாழ் பல்கலைகழக அரசறிவியல் துறை மூன்றாம் வருட மாணவன் நடராசா கஜனின் பூதவுடல் இன்று கிளிநொச்சி பாரதிபுரத்தில் அமைந்துள்ள இல்லத்தில் அவரது இருந்து எடுத்துச் செல்லப்பட்டு இரணைமடு பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

காலை பத்து மணிக்கு இல்லத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று திருப்பலி ஓப்புக்கொடுக்கப்பட்டு பூதவுடல் நல்லடக்கத்திற்கு  எடுத்துச்செல்லப்பட்டது.

பல்கலைகழக மாணவர்கள், பொது மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பெரும் திரளானவர்கள் கலந்துகொள்ள இறுதி ஊர்வலம் இடம்பெற்றது.

அஞ்சலி நிகழ்வின்போது வடக்கு மாகாண கல்வி அமைச்சரும் பதில் முதலமைச்சருமான த.குருகுலராஜா  இரங்கல் உரையாற்றிக்கொண்டிருந்த போது தங்களது கடும் எதிர்ப்பினைத் தெரிவித்த பல்கலைகழக மாணவர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த ஒலி வாங்கிகளையும் கழற்றி எறிந்தனர்.

அத்துடன் ஊடகவியலாளர்களையும் வெளியேறுமாறும் அவர்கள் கூச்சலிட்டதால், அங்கு சிறுது நேரம் அமைதியின்மை ஏற்பட்டது.

எந்த அரசியல் வாதிகளும் இங்கு உரையாற்றக் கூடாது பல்கலைகழக மாணவர்கள் கண்டிப்பாக தெரிவித்த நிலையில் அங்கு வருகை  தந்திருந்த பாராளுன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் எவரையும் ஏற்பாட்டாளர்கள் பேசுவதற்கு அனுமதியளிக்கவில்லை.

பின்னர் கிராம மட்ட அமைப்புகள், ஒரு சில மாணவர்களின் உரையுடன் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்று நிறைவுற்றது.

நடராஜா கஜனின் பூதவுடல் இரணைமடு பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.