யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு(காணொளி)

386 0

யாழ்ப்பாணம் சுன்னாகம் நகரில் ஆடை விற்பனை நிலையமொன்றிற்கு முன்னாள் இரு பொலிஸார் இன்று பிற்பகல் 2.45 மணியளவில் வாளால் வெட்டப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிவில் உடையில் நின்ற தேசிய பொலிஸ் புலனாய்வுத் துறையினரே இவ்வாறு வாளால் வெட்டப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நவரத்தின பண்டார எனும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு தலையிலும், ஹேரத் என்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு கையிலும் வெட்டப்பட்ட நிலையில் 24ஆம் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுன்னாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஆடை விற்பனை நிலையத்திற்கு முன்னால் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த 6 இளைஞர்கள் வெட்டுச் இச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தின்போது மூன்று மோட்டார் சைக்கிள்களில் முகத்தையும் தகட்டிலக்கம் இல்லாத மோட்டார் சைக்கிளில் வந்து தாக்குதல் நடாத்திவிட்டுச் சென்றுள்ளனர்.