உலக உளநலநாள் மட்டக்களப்பில்(படங்கள் இணைப்பு)

357 0

sequence-02-still019உலக உளநல தினத்தை சிறப்பிக்கும் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பில்  நடைபெற்றன.

மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலக ஆலோசனை பிரிவின் வழிகாட்டலின் கீழ் வலயக்கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் தலைமையில் உலக உளநல தின விழிப்புணர்வு நிகழ்வுகள் மட்டக்களப்பு கருவப்பங்கேணி விபுலானந்தா கல்லூரியில் இன்று நடைபெற்றன.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், கௌரவ அதிகளாக மண்முனை வடக்கு பிரதேச செயலக செயலாளர் வி.தவராஜா, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உளநல வைத்திய நிபுணர் ஐ.கடம்பநாதன், கோட்டக்கல்விப் பணிப்பாளர் எ.சுகுமாரன் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள்,  பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

sequence-02-still020 sequence-02-still022sequence-02-still021 sequence-02-still023 sequence-02-still024